Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

கடல்

அனைத்தும்

அடங்கி விட்டது

களிப்புடன்

எனை

கண்டு களித்த

பல நூறு

நெஞ்சங்கள்

அடங்கி விட்டன

என்னுள்........!

எனது

நீல நீரலைகள்

இன்று

கண்ணீர்

அலைகளாய்......!

எனக்கு மட்டும்

குரலோசை

கொடுத்து இருந்தால்

ஆக்ரோசமாய் எழுந்த

அலைகளை

முன்பே

சொல்லி இருப்பேன் .........!

ஆனால்

என்னிடம் இருப்பது

அலையோசை

மட்டும் தானே ...................!!